கவிப்புயல் இனியவன் wrote: நண்பன் wrote: கவிப்புயல் இனியவன் wrote: கீ ரியும் பாம்பும் போல் வாழாதே ..... கீ தமும் ஓசையும் போல் வாழ்..... கீ ழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு .... கீ ர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!! கீ ர்த்தனை மனதுக்கு நன்று ..... கீ ரை கண்ணுக்கு நன்று .... கீ ரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று .... கீ ழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!! கீ ழ்பால் என்று யாரும் இல்லை .... கீ ழ்நிலை என்று எவரையும் எண்ணாதே ..... கீ றல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ...... கீ ழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!! கீ ர்(சொல்) உறுதி வேண்டும் .... கீ ளுடையில் சுத்தம் வேண்டும் .... கீ றலிலும் தெளிவுவேண்டும் .... கீ தை நெறி வாழவேண்டும் .....!!! இவைகளைப் படித்துப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் எடுக்கிறதே எங்களுக்கு நீங்கள் எப்படி இப்படி வரிகளைப் புரிந்து கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகளை கோர்க்கிறீர்கள் பிரமாதம் ஐயா பிரமாதம் நன்றியுடன் நண்பன் உண்மையில் சற்று சிரமமா தான் முதலில் அகராதியில் சொல்லை தேடி பின்பு வரியை எளிய முறையில் உருவாக்குகிறேன் நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி உங்களைபோல் கவிதையில் பற்றுள்ளவர்கள் காண்பது அரிது எல்லா கவிதையும் ரசிக்கும் திறன் எல்லோருக்கும் இல்லை மிக்க நன்றி ..... அப்படியோ நிறைய நிறைய பட்டங்கள் வந்து குவிகிறது ஒரு தளத்தில் மகா கவி - என்கிறார்கள் இன்னொரு தளத்தில் - ஆத்மான கவி என்கிறார்கள் ... மற்றும் கவினாட்டியாரசர் - என்கிறார்கள் ... காதல் மன்னக்கவி என்கிறாகள் .... இவை எல்லாவற்றிலும் எனக்கு பிடித்தது தமிழ் சேனையில் சொன்ன சொல் - கவிப்புயல்.......!!! thumb_up Like thumb_down Dislike on Tue 15 Dec 2015 - 9:15 by நண்பன் மிக்க மகிழ்ச்சி இதே மகிழ்வோடு தொடர்வோம்
இனியவனுக்கு .... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இன்னும் இன்னும் இனிமையாய் இளமையாய் ஆரோக்கியமாய் நிம்மதியாய் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் .... வசந்தம் என்றென்றும் உம் வசமாகட்டும் ! மகிழ்ச்சியே - உம் நிரந்தர வாசமாகட்டும் !! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
Comments
Post a Comment